மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி இரவு கோவத்தில் தன் அறைக்கு சென்று கதவை சாத்தியபின் திறக்கவே இல்லை என்று காதம்பரி பதறினார். கதவை தட்டி தட்டி பார்த்தும் சுருதி கதவை திறக்கவில்லை. பின் ருக்மணி கார்த்திக் என அனைவரும் கதவை தட்டினார்கள். சற்று நேரத்தில் கார்த்திக் கதவை உடைத்து உள்ளே சென்றார்கள். சுருதி மயக்க நிலையில் படுத்து இருந்தார். இதை பார்த்ததும் அனைவரும் பதரினர்கள். சுருதி அருகில் தூக்க மாத்திரை டப்பா இருந்தது. உடனே டாக்டருக்கு அழைத்து வர வைத்தார்கள். அவரும் வந்து பார்த்து சுருதிக்கு எந்த பிரச்சனையும் இல்லை, சிறு மயக்கம் மட்டும் தான் என கூறினார். பின் மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறு கூறினார். சற்று நேரத்தில் சுருதி கண் விழித்தார். கார்த்திக் எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்டார். அதற்கு சுருதி தான் எதிலும் வெற்றி பெறவில்லை எல்லாமே எனக்கு தோல்வி மட்டும் தான் என கூறினார். பின் கார்த்திக்கை பார்த்து தனக்கும் தருனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…