Mouna Ragam 2 Today Episode | 30.12.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை மாற்ற என் உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை என்று சக்தி நினைத்தார். ஆனால் இந்த திட்டம் சரியாக வரும் எதுவும் தவறாக நடக்காது என்றும் நம்பினார். இதனால் மேலும் குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. மனோகர், கார்த்திக், மல்லிகா என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து சக்தி இந்த வேலையை செய்ய வேண்டாம் என்று கூறினார்கள். ஆனல் சக்தி அவர் முடிவில் உறுதியாக இருந்தார். என்ன நடந்தாலும் இதை செய்து முடிப்பேன் என்று கூறினார். சக்தி செய்யப்போகும் இந்த செயலை சொர்ணம் முழுமையாக ஆதரித்தார். பின் மருத்துவர் வந்து பார்த்தார். அவருக்கும் இந்த விவரத்தை எடுத்து கூறினார்கள். ஆனால் அவர் இது நல்லதா கெட்டதா என்று தெரியாது. ஆனால் இதில் வருண் குணமடைய வாய்ப்பு அதிகம் என்று கூறினார். உடனே சக்தி தான் எடுத்து முடிவு சரியானது தான் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author