Mouna Ragam 2 Today Episode | 31.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 31.03.2022

Mouna Ragam 2. 31.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா ஸ்ருதி வந்தது தெரியாமல் கீழே இறங்கி வந்தார். வந்த இடத்தில் ஸ்ருதியை பார்த்து அதிர்ச்சியில் நின்றார். என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினார். மீண்டும் ஒளிந்துகொள்ள முயற்சித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. வேறு வழி இல்லாமல் ஸ்ருதி இடம் பேச கீழே இறங்கி வந்தார். ஆனால் ஸ்ருதி மல்லிகாவை பார்த்து எந்த விதமான சர்ச்சையும் செய்யவில்லை. புதிதாக யாரையோ பார்ப்பது போல் பேசினார். சத்யா அம்மா நீங்கள் தானா என்று எதார்த்தமாக பேசுவது போல் பேசினார். உங்களை பார்க்க இவளோ நாள் ஆகி விட்டது என்று கூறினார். ஆனால் ஸ்ருதி இப்படி பேசுவதை பார்த்து மல்லிகா மற்றும் சத்யா இருவரும் ஒன்றும் புரியாமல் நின்றார்கள். பின் மல்லிகா மற்றும் சத்யா தனியாக பேசினார்கள். ஸ்ருதிக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? இல்லை பழசை மறந்து விட்டாரா? மல்லிகாவை பார்த்து எதுவுமே சொல்லவில்லையே என்று இருவரும் கிளம்பினார்கள். அப்போது சத்யா ஸ்ருதி கொஞ்ச நாளாகவே உன் அப்பா யார்! உன் அம்மா பெயர் என்ன என்று விடாமல் கேட்டாள். ஒரு வேளை உண்மை தெரிந்து உன்னை வர வைக்க தான் ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு உன்னை வர வைத்தாளோ என்று சத்யா புலம்பினார். பின் ஸ்ருதி தானே வந்து உண்மையை ஒத்துக்கொண்டார். சத்யா தான் சக்தி என்ற விஷயம் எனக்கு ரொம்ப நாள் முன்னாடியே தெரியும் என்று கூறினார். ஆனால் யாரிடமும் சொல்ல மாட்டேன் பயப்பட வேண்டாம் என்று கூறினார். நான் என் அம்மாவிடம் கூட சொல்லவில்லை எனவும் கூறினார். இதை கேட்டு சத்யா மல்லிகா இருவருமே குழப்பத்தில் இருந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author