Mouna Ragam 2 Today Episode | 31.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 31.05.2022

Mouna Ragam 2. 31.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வேலை செய்யும் இடத்தில் அவரை பணத்துக்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்று ஊரில் உள்ளவர்கள் பேசியதால் மல்லிகா கோவத்தில் அவர்களை திட்டி தீர்த்தார். மேலும் சத்யாவை இனி வேலைக்கு போக கூடாது என்றார். ஆனால் சத்யா இதை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம் என்றார். மிஞ்சி போனால் 1 மாத்ம் பேசுவார்கள் பின் அதையே மறந்து விடுவார்கள் என்று கூறினார். ஆனாலும் மல்லிகாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீ இனி வேலைக்கு செல்ல வேண்டாம், நான் போகிறேன் என்றார். ஆனால் சத்யா அவரை பேசி புரிய வைத்து சமாதானம் செய்தார். சுகுமாரனும் அவருக்கு ஆறுதல் சொன்னார். வருண் பழனி வீட்டில் இருந்தபடியே சக்தியின் குழந்தை பருவத்தை தெரிந்துகொண்டார். பழனியும் சக்தி சிறு வயதில் இருந்து எப்படி எல்லாம் நடந்துகொள்வாள் என்று ஆர்வமாக கூறினார். சக்தியை பற்றி தெரிந்து கொள்ள வருண் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதே நேரம் கார்த்திக் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்க்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப மனோகர் இடம் பேச வேண்டும் என்று ஷீலா முடிவு எடுத்தார். ஸ்ருதி கார்த்திக் வீட்டுக்கு சென்று கத்தினார். சத்யாவையும் வருனையும் சேர்த்து வைக்கும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்று காதம்பரியிடம் கூறினார். அதை கேட்டதும் காதம்பரி கோவத்தில் கத்தினார். சத்யாவுக்கு என்றால் ஸ்ருதி வாழ்க்கையை பற்றி கூட பார்க்காமல் எதியாவது செய்வீர்களா என்று கேட்டார். கார்த்திக் என்ன சொல்ல வருகிறார் என்று கூட கேட்காமல் கத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author