பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில், கதிர் தனக்கு வந்த கனவை பற்றி தனம் ஜீவாவிடம் கூற கதிருக்கும் முல்லைக்கும் சீக்கிரமே குழந்தை பிறக்கப்போகிறதோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கும் எழுகிறது, அந்த வீட்டிலும் எழுகிறது. கண்ணன் அடகு கடைக்கு செல்ல, இது திருட்டு நகையா என கேட்டு முதல் கடையிலிருந்து துரத்திவிடப்படுகிறார்.
முல்லை, கதிர், தனம், மூர்த்தி அனைவரும் லக்ஷ்மி அம்மாவை மருத்துவமனையில் பார்க்கிறார்கள். அவரது உடல்நலம் நன்றாக தேறி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள். நாளையே வீட்டிற்கு அழைத்து வரலாம் என முடிவு செய்கிறார்கள்.
கண்ணன் அடுத்த அடகு கடைக்கு போக அங்கு மூர்த்திக்கு தெரிந்தவர் நகையை வாங்கி வைத்துவிட்டு மாலை வருமாறு கூறி அனுப்புகிறார். இதற்கு ஐஸ்வர்யா கடைக்காரரை நம்பாமல் கண்ணனை திட்ட கண்ணனும் என்ன செய்வதென்று அறியாமல் விழிக்கிறார். அடகுக் கடைக்காரர் மூர்த்தியிடம் விஷயத்தைத் தெரிவிக்க, மூர்த்தி தானே பணம் கொடுத்து விடுவதாகவும், நகையை திருப்பி கொடுத்து விடுமாறும் கூறுகிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்