ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, கண்ணம்மா கோவத்தில் பாரதியிடம் கத்தினார். ஹேமா எனக்கு பிறந்த குழந்தை எனவும், தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது எனவும் கூறினார். ஆனால் அதை கேட்டு பாரதி சிரித்து கேலி செய்தார். மேலும் இது போல் பொய்யை நம்ம நான் முட்டாள் இல்லை என்றும் கூறினார். ஆனால் கண்ணம்மா விடாமல் நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது தன உண்மை என்று கூறினார். ஆனால் பாரதி தான்தான் கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் என்று கூறினார். அதனால் கண்ணம்மா சொல்வது அனைத்துமே பொய் என்றார். ஆனால் கண்ணம்மா எனக்கு இரட்டை குழந்தை பிறந்தது உண்மை, அதை பிரசவம் செய்தது தன் மாமியார் தான் என்றார். மேலும் இதை நிரூபிக்க பிரசவம் அன்று பாரதியுடன் இருந்த நர்ஸ் துளசி வந்து சாட்சி சொன்னார். இரண்டாவது குழந்தையை பிரசவம் பார்த்தது சௌந்தர்யாதான் என்றார். அதில் ஒரு குழந்தையை எடுத்து வந்து பாரதியிடம் கொடுத்து ஆதரவு இல்லாத குழந்தை என கொண்டு வந்து விட்டார் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…