ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செய்த சமையலில் உப்புக்கு பதில் சக்கரை போட்டு சிக்கன் செய்து நடுவர்களை கோபம்கொள்ள வைத்தார். பின் கடைசி போட்டிக்கு தகுதியானவர்கள் என்று மொத்தம் 7 பேரை தேர்ந்து எடுத்தார்கள். அதில் சரவணன் பெயர் இல்லை. சற்று நேரத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒரு புது போட்டியாளரை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு உள்ளது என கூறினார்கள். இதனால் 6 ஓட்டுகள் வாங்கி சரவணனும் தேர்ந்து எடுக்கபட்டார்.சரவணனை மேடைக்கு அழைத்தார்கள். ஆனால் சரவணன் சுயநினைவே இல்லாமல் நின்றார். சற்று நேரத்தில் சரவணன் மயக்கம் போட்டு விழுந்தார். பின் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பார்த்த டாக்டர் ஒரு அதிர்ச்சியை கொடுத்தார். சரவணனுக்கு ஒரு கை வேலை செய்யவில்லை என்று கூறினார். இதை கேட்ட சந்தியா அதிர்ச்சி அடைந்தார். அடுத்து டாக்டர் என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…