ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு எந்த தகுதியும் இல்லை என்று சந்தியாவிடம் வருந்தினார்.சந்தியா அவருக்கு தன்னம்பிக்கை கொடுக்க என்ன என்னவோ பேசிபார்தார். ஆனால் சரவணன் மனம் உடைந்து போய் பேசினார். இதனால் இவர் கையை சை செய்ய அதிர்ச்சி வைத்தியம் எதாவது செய்யவேண்டும் என்று திட்டம் போட்டார். பின் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுவது போல் நடித்தார். அதை பார்த்த சரவணன் சந்தியாவை காப்பாற்ற முயற்சி செய்தார். அதில் அவர் கை சந்தியா எதிர்பார்த்தது போல் சரியானது. அதை உணர்ந்த சரவணன், மீண்டும் ஒரு நம்பிக்கையாக பேசினார்.இதை பார்த்த சிவகாமி, மிகவும் சந்தோசம் அடைந்தார். உடனே அர்ச்சனா மற்றும் ஆதி கை தான் சரி ஆகிற்சே, இனி ஊருக்கு கிளம்பலாம் என்று கூறினார்கள். ஆனால் இந்த போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் என்று சிவகாமி கூறினார். சரவணனும் எனக்கு நம்பிக்கை இருக்கு, வெற்றியோ தோல்வியோ எதுனலும் பாத்துக்கலாம் என்று நம்பிக்கையாக கூறினார்.அதை பார்த்த சிவகாமி ஆச்சரியமாக பார்த்தார். அன்று இரவு அனைவரையும் எழுப்பி சரவணன் ஒரு இன்ப அதிர்ச்சி தர நினைத்தார். சிவகாமி மற்றும் ரவிக்கு இன்று திருமண நாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாட நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…