ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியாவிற்கு ஒரு அழைப்பு வந்தது. காவலர் ஒருவர் தாங்கள் சந்தியா வீட்டிற்க்கு தான் வந்து கொண்டு இருப்பதாக கூறினார். அதை கேட்ட சந்தியா பதட்டம் அடைந்தார். பின்னர் சரவணனுக்கு அழைத்து வீடுக்கு வருமாறு கூறினார். அவர் வருவதற்குள் காவலர்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்தார்கள். இதை பார்த்த சிவகாமி குழப்பம் அடைந்தார். அக்கம் பக்கம் இருப்பவர்களும் வீட்டில் போலீஸ் வண்டி நிற்பதை பார்த்து கேட்க ஆரம்பித்தனர். காவலர்கள் சந்தியாவை பாராட்டினர். பாஸ்போர்ட் காணவில்லை என தங்களுக்கு புகார் வந்திருப்பதாக கூறினார்கள். தக்க சமயத்தில் சந்தியா உதவியதாகவும் கூறினார்கள். இதனால் இன்னும் கோவம்கொண்டார் சிவகாமி. பின் சந்தியாவை திட்டித்தீர்தார். தான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போலீசில் சொல்லி இருபபாய் என திட்டினார். பின் சரவணன் வந்து என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்துகொண்டார். அடுத்து என்ன நடந்தது?காணொளியை பார்க்க….