Raja Rani 2 Serial Today Episode | 22.11.2021 | Vijaytv

rajarani2.22.11.2021

rajarani2.22.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமியை பார்க்க பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வந்தார்கள். சந்தியாவை அவர்களது குழுவில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். சந்தியாவும் அதற்கு சம்மதித்தார். அப்போது சிவகாமி தங்களது பயணத்தை பற்றி கூறினார். சரவணன் சமையல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு போட்டியில் வெற்றி பெற்று கடைசி போட்டியில் கலந்துகொள்ள சென்னை செல்கிறார் என்று கூறினார் சிவகாமி. அதுவும் நால்வரும் விமானத்தில் பயணம் செய்ய போவதாக கூறினார். பின் அதற்கான டிக்கெட் மற்றும் பத்திரிக்கையை காமிக்க பார்வதியை எடுத்து வர சொன்னார். பார்வதி வைத்த இடத்தில் தேடி பார்த்து அதை காணவில்லை என பதற்றம் அடைந்தார். பின் அனைவரும் அதை தேட ஆரம்பித்தார்கள். அர்ச்சனா தான் நினைத்தது நடப்பதை பார்த்து ரசித்தார். சிவகாமி தன் மகனை நினைத்து வருந்தி அழுதார். அர்ச்சனா பேசுவதை வைத்து ஆதிக்கு அவர்மீது சந்தேகம் வந்தது. சரவணன் தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என வருத்தம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author