Raja Rani 2 Serial Today Episode | 26.05.2022 | Vijaytv
Raja Rani 2. 26.05.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் கடைக்கு எதார்த்தமாக வந்தார். அப்போது போலீஸ்காரர்கள் வெளியில் ஒவ்வொருவராக பேசுவதை பார்த்த செல்வம் சற்று பதட்டம் ஆனார். அதையும் கவனித்தார் சந்தியா. மேலும் அந்த போலீஸ்காரர் வந்து இந்த கடைசி 6 மாதங்களில் யாரெல்லாம் வெளியூரில் இருந்து வந்தவர்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து ஆதார் அட்டை அல்லது எதாவது ஒரு ID கொண்டு வர வேண்டும் என்று கூறினார். செல்வம் அப்படி யாரும் இல்லை என்று சொல்ல வந்தார். ஆனால் சந்தியா செல்வம் 4 மாதம் முன் தான் வேலைக்கு சேர்ந்தான் என்று கூறினார். வேறு வழி இன்று செல்வம் தன் அட்டையை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அங்கு பரிசோதனை நடக்கும்போது சந்தியா பதட்டமாக ஓடி வந்தார். பார்வதி கிடைத்து விட்டதாக அங்கு நின்றவள் முன் கூறினார். ஆனால் மயக்கத்தில் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதித்தனர் என்றும் கூறினார். இதை கேட்ட செல்வம் பார்வதி கண் முழித்து விட்டால் நம் திட்டம் வீணாகி விடும் என்று நினைத்தார். அதனால் பார்வதியை கொள்ள வேண்டும் என்று நினைத்தார். உடனே அந்த மருத்துவமனைக்கு கிளம்பினார். அங்கு சந்தியா சற்று அசந்த நேரம் பார்த்து பார்வதிக்கு விஷ ஊசி போட முயன்றார். ஆனால் அங்கு இருந்தது பார்வதியும் இல்லை, பார்வதி எங்கும் தப்பிக்கவும் இல்லை. செல்வத்தை சுற்றி வளைத்து போலீஸ் நின்றது. ஆனால் முகத்தில் முகாகவசம் அணிந்து இருந்ததால் அவரை சந்தியாவுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் அங்கு இருந்து தப்பித்து ஓடினன் செல்வம். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.