Raja Rani 2 Serial Today Episode | 29.11.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அவர்களது அறைக்கு வந்து சேர்ந்தனர். உள்ளே வந்ததும் சரவணன் அந்த அறையை பார்த்து வியந்தார். ஒரு அறையே ஒரு வீடு அளவிற்கு உள்ளதே என்று வியந்தார். பின் அங்கு இருந்த அனைத்தையும் சுத்தி பார்த்தார்கள் இருவரும். குளியல் அறைக்குள் நீச்சல் குளம் இருப்பதை எல்லாம் பார்த்து, தன் அம்மா அப்பா இருவரும் இங்கு வந்து இருக்கலாம், என்று வருத்தப்பட்டார். பின் சந்தியா சிவகாமிக்கு அழித்தார். இருவரும் பேசினார்கள். சரவணன் அவர் தங்கும் இடத்தில் உள்ள வசதிகளை ஆர்வத்தோடு கூறினார். அவர்களும் இங்கு வந்து இருக்கலாம் என்று கூறினார். சிவகாமியும் பரவாயில்லை நீயாவது இதை எல்லாம் அனுபவித்துக்கொண்டு வா என்று கூறினார். விக்கி பாஸ்கரை அழைத்து பேசினார். பார்வதி வீட்டில் சரவணன் சந்தியா இருவரும் வெளியூர் சென்றதாக கூறினார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இருவரும் வெளியில் செல்லுங்கள் என திட்டம் ஒன்று கூறினார். பாஸ்கர் அதன் படியே செய்வதாக கூறினார். அர்ச்சனா செந்திலை சமாதானம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். அதனால் அவரை தன் வழிக்கு வர வைக்க என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படி என்ன செய்தார். காணொளியை பார்க்க…

About Author