Raja Rani 2 Today Episode | 02.05.2022 | Vijaytv
Raja Rani 2. 02.05.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வதை பார்த்து பாஸ்கர் அம்மா அப்பா இருவரும் வியந்தார்கள். சந்தியாவை பாராட்டவும் செய்தார்கள். பின் அர்ச்சனா செய்து விஷயத்தையும் அவர்கள் மறைக்காமல் சொல்ல நினைத்தார்கள். அர்ச்சனா அவர் அம்மா அப்பாவுடன் தன் வீட்டுக்கே வந்து பார்வதி திருமணத்தை நிறுத்தி அவரது தங்கைக்கு பாஸ்கரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டார் என்றும் இதனால் அவர்கள் கோவம் கொண்டதையும் கூறினார்கள். சந்தியா இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். சொந்த நாத்தனார் திருமணத்தை நிறுத்த எப்படி மனசு வந்தது இவளுக்கு என்று யோசித்தார். ஒரு வேளை பார்வதியை அர்ச்சனா தான் எதாவது சொல்லி மிரட்டுகிறார் என்று சந்தேகம் கொண்டார். இதற்கு இடையில் விக்கி மண்டபத்தில் கரெண்ட்டை நிறுத்தி வைத்து பார்வதி இருக்கும் அறைக்கு வந்தார். வந்து பார்வதியை மேலும் மிரட்டினார். இங்கேயே என்னுடன் சேர்ந்து இருக்கும்படி கூறினார். பார்வதிக்கு பதட்டத்தில் வேர்த்து கொட்டியது. அந்த நேரம் பார்வதியின் மாமியார் அங்கு வந்து பேசினார். அதையும் விக்கி ஒளிந்து இருந்து பார்த்தார். மேலும் அவர் கிளம்பியதும் விக்கி காலில் விழுந்து கெஞ்சினார் பார்வதி. அர்ச்சனா செய்ததை சரவணன் இடம் சொல்லலாம் என்று அவரை அழைத்து பேசினார் சந்தியா. ஆனால் அவர் இப்போது சந்தோசமாக இருக்கிறார் என்பதால் அதை சொல்லி அவரை கஷ்டபடுத்த வேண்டாம் என்று எதையும் சொல்லாமல் விட்டார் சந்தியா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.