Raja Rani 2 Today Episode | 03.01.2023 | Vijaytv

Raja Rani 2. 03.01.2023

Raja Rani 2. 03.01.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா காட்டுக்குள் யாரோ நடமாடுவது போல் சத்தம் கேட்டது. அதை கேட்டதும் சந்தியா கையில் விளக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு யார் என்று பார்க்க கிளம்பினார். என்னதான் தேடினாலும் யாரும் கிடைக்கவில்லை. ஆனல் அங்கு கிடந்த ஒரு காகிதத்தில் குறிப்பு இருப்பதை பார்த்தார். அதில் உங்களுக்கு நான் துணியாக இருப்பேன், நீங்கள் செய்ய இருக்கும் காரியத்தை செய்து முடிக்கலாம் என்று எழுதி இருந்தது. அதை பார்த்ததும் நம்மில் ஒருவர் தான் இந்த குறிப்பை யாருக்கோ எழுதி இருக்க வேண்டும் என்று சந்தியா சந்தேகம் கொண்டார். மேலும் யாராக இருக்கும் என்று யோசித்தார். அப்போது அந்த வழியாக அப்துல் ன்கு வந்தது, பேசிய விதம், பதட்டம் என்று எல்லாத்தையும் வைத்து அப்துலுக்கும் இந்த குறிப்புக்கும் எதாவது தொடர்பு இருக்கும் என்று நினைத்தார். இதை உடனே கௌரியிடம் சொல்லவும் முயற்சி செய்தார். ஆனால் சொல்லவே முடியாமல் சூழ்நிலைகள் இருந்தது. அர்ச்சனா தன் குழந்தையை அவசர அவசரமாக ஆட்டோவில் அழைத்து செல்வது பார்த்து பதறினார். என்ன என்று விசாரித்து தெரிந்து கொண்டார். அந்த குழந்தைக்கு காய்ச்சல் அதிகம் ஆகி வலிப்பு வந்து விட்டதாக கூறினார்கள். உடனே தன் மகளை இப்படி தன்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்று அழுதார். அதை பார்த்து அனைவருமே பக்கத்து வீட்டு குழந்தைக்கு இப்படி அழுது புலம்புகிறார் என்று ஆச்சரியமாக பார்த்தார்கள். பின் மனம் கேட்காமல் மருத்துவமனைக்கும் சென்று குழந்தையை பார்த்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author