Raja Rani 2 Today Episode | 03.02.2022 | Vijaytv

Raja Rani 2.03.02.2022

Raja Rani 2.03.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தெரிந்த உண்மையை மனதில் வைத்து தனியாக புலம்பினார். சரவணன் அங்கு வந்து பேசினார். என்ன காரணம், எதற்காக பொய் சொல்லிவிட்டு வெளியே சென்றீர்கள்? ஏன் என்னிடம் மறைக்க வேண்டும்? என்ன பிரச்சினை என்று கேட்டார். ஆனால் சந்தியா நடந்த எதையும் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பதிலேயே இருந்தார். பின் இப்போதைக்கு எதையும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தார். சரவணன் இதனால் கோபம் கொண்டார். என்னிடம் இன்னும் நம்பிக்கை வரவில்லையா? எதற்காக என்னிடம் மறைக்க வேண்டும் என்று கேட்டார்? ஆனால் சந்தியா பதில் சொல்ல முடியாமல் தவித்தார். சரவணன் கோவத்தில் கடைக்கு கிளம்பினார். இரவு சரவணனை பார்த்து நடந்ததை கூற கிளம்பினார் சந்தியா. அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் இருந்த இடத்தில் போலீஸ் வந்து தவறான தொழில் செய்வதாக நினைத்து அவர்களை அடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். செந்தில் தாங்கள் திருமணம் ஆனவர்கள் என்று கூறியும் அவர்களை நம்பவில்லை. வீட்டில் யாரையாவது பேசும்படி கூறினார். அதனால் சரவணன் எண்ணை அழைத்து உடனே ஸ்டேஷனுக்கு வர செய்தார்கள். சரவணன் ஒன்றும் புரியாமல், வீட்டிலும் யாரிடமும் எதுவும் சொல்லாமல் உடனே கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author