Raja Rani 2 Today Episode | 03.05.2022 | Vijaytv
Raja Rani 2. 03.05.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, விக்கி கொடுத்த பரிசை ஆதி பார்வதிக்கு கொடுக்க வந்தார். அப்போது நடுவில் பாஸ்கர் அதை மறித்து வனகினார். தானே பார்வதிக்கு கொடுக்க நினைத்தார். அதனால் இருவரும் பேசிக்கொண்டே பார்வதி அறைக்கு வந்தார்கள். ஆதி நீங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருங்கள் என்று கூறி அங்கு இருந்து கிளம்பினார். பாஸ்கர் பார்வதியை பார்த்து ஆசையாக பேசினார். இந்த பரிசை சேர்ந்தே பிரிப்போம் என்று கூறினார். ஆனால் அதற்குள் அவர் அம்மா அங்கு வந்தார். இங்கு மாப்பிள்ளைக்கு என்ன வேலை. இங்கிருந்து கிளம்பி என்று வெளியே அனுப்பினார். பின் அந்த பரிசை பார்வதி இடம் கொடுத்தார். இந்த நிலையில் பார்வதி இந்த பரிசை தன் மாமியார் பிரித்தால் என்ன நடக்குமோ என்று பயந்தார். மேலும் அது நடந்தால் என்ன நடக்கும் என்றும் யோசித்து பார்த்தார். அப்போது தன் மாமியார் அந்த புகைப்படங்களை பார்த்து கோபம் கொண்டார். உடனே மண்டபத்தில் இருக்கும் அனைவரையும் அழைத்து சிவகாமி குடும்பத்தை அசிங்கபடுத்தினர். பாஸ்கர் தன்னிடம் எதற்கு இந்த பிரச்சனையை சொல்லவில்லை என்று கேட்டு கோவத்தில் கத்தினார். உடனே இந்த கல்யாணம் வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் கிளம்பியது போல் அவர் நினைத்து பார்த்தார். ஆனால் பார்வதியின் மாமியார், வருக்கு சாப்பாடு கொண்டு வரவா என்று கேட்டுவிட்டு உடனே கிளம்பிவிட்டார். பின் தனியாக அந்த பரிசை பிரித்து பார்த்தார் பார்வதி. அதில் அவர் எதிர்பார்த்தது போல் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..
About Author
Auto Amazon Links: No products found.