ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸியை மருத்துவமனைக்கு அழைத்து வந்து இருந்தார் ஆதி. ஜெஸ்ஸி பரிசோதனை முடிந்ததும் அந்த மாத்திரை மறந்துகளை வாங்க வேண்டும் என்று ஆதி இடம் கூறினார். எதற்குமே எந்த வித சந்தோசமும் இல்லாமல் நடந்தது கொண்டார். இந்த குழந்தைக்கு செலவு செய்ய விருப்பம் இல்லாமல் செய்தார். எதற்கு இந்த தேவை இல்லாத செலவு என்று கடிந்து கொண்டார். இதனால் ஜெஸ்ஸி எரிச்சல் அடைந்தார். தன் மனைவி மற்றும் குழந்தைக்கு செலவு செய்வதை கூட கணக்கு பார்க்கிறான் என்று நொந்து கொண்டார். அடுத்து சரவணன் இடம் சந்தியா தன்னால் இன்று நடந்த பயிற்சியில் முழுமையாக முடிக்க முடியவில்லை என்று நடந்ததை கூறினார். ஆனால் சரவணன் அவருக்கு ஊக்குவித்து, நீங்கள் தனியாக ஓடி பார்த்து எத்தனை நிமிடங்கள் ஆகியிருக்குது என்று பார்க்க வேண்டும் என்று கூறினார். இதனால் சந்தியாவும் தனக்கு தானே பரிசோதிக்க வேண்டும் என்று யோசித்தார். ஜோதி உதவியுடன் சந்தியாவும் அதே போல் ஓடி தனக்கு தானே போட்டி வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…