Raja Rani 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

Raja Rani 2. 05.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் மாட்டினாலும் கோச்சிங் சென்டர் விஷயம் யாருக்கும் தெரியவில்லை என்பதால் தப்பித்தோம் என்று பேசிக்கொண்டார்கள். சந்தியா மீண்டும் அத்தை யிடம் இதை மறைப்பது சரி அல்ல என்று கூறினார். எப்படியும் ஒரு நாள் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என்று கூறினார். ஆனால் சரவணன் அதை பற்றி கவலை வேண்டாம், ஒரு நாள் என் அம்மாவே உங்களை பார்த்து பெருமை படுவார் என்று கூறினார். சந்தியா நமக்கென்று ஒரு குழந்தை பெற்று கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் சரவணன் உங்கள் கனவுக்கு எப்போதும் நான் குறுக்கில் வர மாட்டேன். கொஞ்ச நாள் அதை எல்லாம் ஒத்தி வைக்கலாம் என்றார். சந்தியா இது போன்ற ஒரு கணவர் எனக்கு கிடைக்க குடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று ஆனந்த கண்ணீர் விட்டார். அடுத்த நாள் சந்தியா கோச்சிங் சென்டரில் கூட படிக்கும் தோழிகள் சந்தியாவை தேடி வீட்டுக்கே வந்தார்கள். சரவணன் அவர்களை எப்படியாவது சிவகாமியிடம் உண்மையை சொல்லாமல் கிளப்ப வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அர்ச்சனா அவர்களை மீண்டும் மீண்டும் எதையாவது கேட்டுகொண்டே இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…