Raja Rani 2 Today Episode | 06.06.2022 | Vijaytv

Raja Rani 2. 06.06.2022

Raja Rani 2. 06.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, செல்வம் தான் தீவிரவாதி என்று தெரிந்ததும் அவனை சரவணன் துரத்தி பிடித்தார். சண்டை போட்டார். ஆனால் செல்வம் கையில் துப்பாக்கியுடன் சரவணனை சுட போவதாக கூறினார். அந்த நேரம் சிவகாமி, ரவி, செந்தில் என அனைவரும் அங்கு வந்தார்கள். உடனே உன் அம்மாவை சுட போகிறேன், அப்பாவை சுடவா என்று பயமுறுதினர். அசந்த நேரத்தில் செல்வம் தப்பித்து ஓடினான். ஆனால் அந்த பக்கம் போலீஸ் இருந்ததால் செல்வத்தை மடக்கி பிடித்தார்கள். ஆனால் செல்வம் சந்தியா மீதும் அவர் குடும்பத்தின் மீதும் கோவத்தில் கத்தினார். போலீசில் மாட்டியும் திமிராக பேசினான் செல்வம். இதை கவனித்த சந்தியா மேலும் சந்தேகம் கொண்டார். வேறு எதுவும் திட்டம் வைத்து இருப்பானோ என்று யோசித்தார். பாஸ்கர் தேடி அலைந்து பார்வதியை கண்டு பிடித்தார். அவரை பார்த்ததும் அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். தன்னால் உன்னை விட்டு இருக்கவே முடியாது என்று கூறினார். மேலும் பார்வதி தான் இனி யாரையுமே உயிரோடு பார்க்க முடியாது என்று நினைத்தேன், இப்போது உயிரோடு இருப்பதே சந்தியா அண்ணியால் தான் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author