Raja Rani 2 Today Episode | 07.02.2022 | Vijaytv

Raja Rani 2.07.02.2022
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் ஆட்டோவில் செந்தில் மற்றும் அர்ச்சனாவை வீட்டிற்கு அழைத்து வந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் பதரிபோனார்கள். சரவணனை என்ன நடந்தது? இரவு முழுவதும் எங்கு சென்றாய்? வீட்டில் யாரிடமும் சொல்லாமல் என்ன வேலை உனக்கு என்று சிவகாமி கேள்விகளை அடுக்கினார். ஆனால் சரவணன் எந்த பதிலும் சொல்லாமல் நின்றார். அடிக்கடி கேட்கவே, அர்ச்சனா அம்மாவை மருத்துவமனையில் இருந்து கிளப்பி வீட்டில் விட்டு வந்தோம் என்று கூறினார். பின் அர்ச்சனா செந்திலும் அதே பொய் சொல்லி சமாலிதார்கள். ஆனால் சரவணன் அவர்களை பேசவிடாமல் அவர்கள் அறைக்குள் செல்லுமாறு கூறினார். இதனால் என்ன நடக்கிறது என்று புரியாமல் அனைவரும் பார்த்தார்கள். அந்த நேரம் வீட்டிற்கு போலீஸ் வந்து நின்றது. போலீஸ் வந்து 1 வருடம் முன்னாடி சிவகாமி மேல் கொடுத்த புகார் யார் கொடுத்தது என்று கண்டு பிடித்து விட்டோம் என்று கூறினார்கள். உடனே சந்தியா பதறினார். சரவணன் அந்த நபர் யார் என்று கேட்டார். அந்த அதிகாரியும் அது பிரியா என்ற பெயரில் வந்து உள்ளது. மற்றும் அர்ச்சனா வீட்டு முகவரியை கூறி இந்த வீட்டில் இருந்து தான் அந்த புகார் வந்தது என்று கூறினார். வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அர்ச்சனா எல்லா வேலைகளையும் செய்துவிட்டு எதுவும் தெரியாததை போல் நடித்து நம்மளை ஏமாற்றி இருக்கிறார் என்று சிவகாமி அழுது புலம்பினார். ஆதி 5 லட்சம் பணத்தை எடுத்ததை தான் கண்டு பிடித்து விட்டார்களோ என்று பயந்து போய் நின்றான். ஆனால் இது வேறு பிரச்சனை என்று தெரிந்ததும் தான் பெருமூச்சு விட்டபடி நின்றான். பார்வதி அர்ச்சனா இப்படி செய்யக்கூடிய ஆள் தான், சொந்த வீட்டில் நகையை திருடியது, குடோன் எரிந்து விட்டது என்று சொன்னது, இப்போ அம்மா பேரில் பொய் புகார் கொடுத்தது என்று எல்லாமே அவர் செய்து உள்ளர் என்று கூறினார். இதனால் இப்போ அவர் அம்மாவுக்கு நெஞ்சு வலி என்று சொன்னதும் பொய்யாக தான் இருக்கும் என்று கூறினார். இதனால் வீடே பதட்டத்தில் இருந்தது. ஆனால் அர்ச்சனா வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.