ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவர் கணவர் பட்ட கஷ்டங்கள் மற்றும் அவரது குடும்பத்தை எப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்தார் என்று பெருமையாக கூறினார். அதோடு தன் லட்சியத்தை அவரது லட்சியமாக நினைத்து வாழ்கிறார் என்றும் கூறினார். இதனால் கோச்சிங் சென்டரில் இருந்தவர்களுக்கு சரவணன் மீது மேலும் மதிப்பு கூடியது. அவரை பாராட்டி அனைவரும் கை தட்டினார்கள். அடுத்த நாள் சந்தியா எவளவு நாள் இதே போல் ஏமாற்றி கோச்சிங் சென்டர் போக முடியும் என்று தெரியவில்லை என்று வருந்தினார். ஆனால் சரவணன் அதை பற்றி கவலை பட வேண்டாம் என்றார். குழந்தை பெற்று கொள்ள ஆசை இல்லையா என்று ஸ்னதிய கேட்டார். சரவணன் தனக்கும் ஆசை இருக்கிறது ஆனால் அது இப்போதைக்கு வேண்டாம் என்றார். அர்ச்சனா எதோ திருட்டுத்தனம் செய்வது போல் நினைத்தார் செந்தில். அதை கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் செந்தில் அர்ச்சனா செல்லும் இடத்திற்கு அவருக்கே தெரியாமல் பின்தொடர்ந்து சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…