Raja Rani 2 Today Episode | 08.08.2022 | Vijaytv
Raja Rani 2. 08.08.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன்னுடைய ஹால் டிக்கெட் இன்னும் கிடைக்கவில்லை என்று கவலையில் இருந்தார். இதனால் சாப்பிடாமல், தூங்காமல் மிகவும் வேதனையில் இருந்தார். தான் இவளோ நாள் கஷ்டப்பட்டு உழைத்து படித்தது வீணாகிறதே, மேலும் தன் அப்பாவின் கனவு பலிக்காமல் போய் விடுமோ என்று பயந்தார். அதே போல் சரவணன் தூக்கம் வராமல் தவித்தார். ஆனால் நடப்பது அனைத்தயும் பார்த்தும் சிவகாமி கண்டுகொள்ளாமல் இருந்தார். மேலும் சந்தியா பரிட்சை எழுத வேண்டாம் என்று உறுதியாக இருந்தார். அதே போல் அர்ச்சனா சந்தியா பரிட்சை எழுத முடியாமல் போகிறது என்று நினைத்து சந்தோசத்தில் துள்ளி குதித்தார். இதனால் அர்ச்சனா மீது சந்தேகம் கொண்டார் செந்தில். தனக்கு அர்ச்சனா மீது தான் சந்தேகம் இருப்பதை அவர் வெளிப்படுத்தினார். ஆனால் அர்ச்சனா தனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…