Raja Rani 2 Today Episode | 09.09.2022 | Vijaytv
Raja Rani 2. 09.09.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ரவி அப்பாவின் மருத்துவத்திற்கு வேண்டிய இரத்த வகை கிடைக்கவில்லை. இதனால் வீட்டில் அனைவருமே பதட்டத்தில் இருந்தார்கள். ஆதி தன் அப்பாவுக்கு விபத்து நடந்தது அதனால் மருத்துவமனையில் இருப்பதை அனைத்தையும் ஜெஸ்ஸியிடம் ஃபோனில் கூறினார். மேலும் அந்த குறிப்பிட்ட இரத்தவகை கிடைக்கவில்லை என்று கூறினார். இதை கேட்ட ஜெஸ்ஸி உடனே அவரது அப்பா அம்மா உடன் ஹாஸ்ப்பிடலுக்கு வந்து சேர்ந்தார். அந்த நேரம் சந்தியா சரவணன் இடம் ஜெஸ்ஸியின் இரத்த வகையும் இதே தான் என்று கூறினார். உடனே சரவணன் ஜெஸ்ஸியை அழைத்து வருமாறு கூறினார். ஆனால் அதேக்குள் ஜெஸ்ஸி ஆதி சொன்னதை வைத்து அவரே கிளம்பி வந்து இருந்தார். சிவகாமி மற்றும் அவரது மாமியார் இருவருமே அந்த ஜெஸ்ஸியை உடனே அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அந்த நேரம் சந்தியா, மாமாவுக்கு இரத்தம் தேவை படும்போது மட்டும் இந்த ஜாதி மதம் என்று பார்க்காமல் இரத்தம் கொடுக்கலாம் ஆனால் நம் வீட்டு மருமகள் ஆக அடையாளத்தை விட்டு வர சொன்னாள் இது என்ன நியாயம் என்று கேட்டார். அதற்கு சிவகாமி அம்மா பதில் சொல்ல முடியாமல் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….