Raja Rani 2 Today Episode | 09.11.2022 | Vijaytv
Raja Rani 2. 09.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவுக்கு சைக்கிள் பந்தயம் ஆரம்பித்தார்கள். சந்தியா தேர்ந்து எடுத்த 23வது இடத்தில் அவரது பெயர் காணவில்லை என்று பார்த்தார். பின் அங்கு தேடினால், கடைசியில் 5வது இடத்தில் அவரது பெயர் இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தன் பெயரை யாரோ மாற்றி வைத்து விட்டார்கள் என்று உயர் அதிகாரி இடம் கூறினார். ஆனால் அவர் அதெல்லாம் இப்போது மாத்த முடியாது. எப்படியும் இந்த 5வது இடத்தில் தான் நீ ஓட்ட வேண்டும் என்று கூறினார். வேறு வழி இல்லாமல் சந்தியா அந்த சைக்கிளை ஓட்ட ஆர்மபிதார். ஆனால் அதற்குள் சந்தியா சைக்கிள் பெடலை ரிப்பேர் செய்து வைத்து விட்டார் பயிற்சி செய்யும் நபர். ஜோதி இங்கு நடக்கும் போட்டியை சரவணனுக்கு வீடியோ கால் மூலமாக காமிக்கும் படி செய்தார். செந்தில் தான் தலைவர் போட்டிக்கு நிற்க போவதை தன் அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதை அர்ச்சனா தடுத்து நிறுத்தினார். அந்த நேரம் வீட்டுக்குள் ரவி மற்றும் சிவகாமி இருவரும் சேர்ந்து தங்கள் மகன் ஒரு வியாபார சங்க தலைவராக இருந்தால் நமக்கும் பெருமை தானே என்று பேசிக்கொண்டார்கள். அதை கேட்ட செந்தில் மற்றும் அர்ச்சனா செந்தில் போட்டியிடுவதை பற்றி தன் பேசுகிறார்கள் என்று தவறாக புரிந்து கொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.