Raja Rani 2 Today Episode | 09.12.2022 | Vijaytv
Raja Rani 2. 09.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி மற்றும் அர்ச்சனா வீதியில் நின்று சண்டை போடுவதை பார்த்த சிவகாமி மனம் நொந்து போனது. வீட்டில் வந்து ரவி அப்பாவிடம் கூறி புலம்பினார். என் குடும்பம் என் கண் முன்னே இப்படி சிதைந்து போய்விடுமோ என்று பயந்தார். ரவி அப்பா அவருக்கு ஆறுதல் கூறினார். இருந்தும் சிவகாமி சோகத்தில் இருந்தார். இதை கவனித்த சரவணன் என்ன என்று விசாரித்தார். அதற்குள் ஆதி கூச்சலிட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தார். ஜெஸ்ஸி கடைக்கு முன் எதற்கு இப்படி கத்த வேண்டும் என்று கேட்டார். ஆனால் அர்ச்சனா தன் செய்ததில் எந்த தவறும் இல்லை என்பது போல் பேசினார். அந்த கடையே நான் போட்ட பிச்சை என்று குத்தலாக பேசினார். மீண்டும் வீட்டுக்குள் ஆதி அர்ச்சனா செந்தில் என அனைவரும் சண்டை போட ஆரம்பித்தார்கள். அப்போது செந்தில் குடித்து இருப்பதை சரவணன் கவனித்தார். பின் செந்தில் குடித்து இருப்பதை தெரிந்துகொண்ட சிவகாமி அதிர்ச்சி அடைந்தார். பின் செந்திலை அடுத்து குடிப்பது தவறு என்று கூறினார்கள். ஆனால் அர்ச்சனா செதில் மீது எந்த தவறும் இல்லை என்று வாதாடினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.