ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சந்தேகப்பட்ட இடத்தில் ஒரு எலும்பு துண்டு கிடைத்தது. அதையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அந்த நேரம் கருணாகரன், தன் மகனை சந்தியாவும் அவளது குடும்பமும் தான் எதோ செய்து இருக்க வேண்டும் என்று நம்பினார். அதனால் வீட்டில் யார் இங்கு சென்று இருந்தாலும் அவர்களை நோட்டம் இட்டுக்கொண்டு இருந்தார். இதனால் குடும்பமே பதட்டம் அடைந்தது. இதனால் சந்தியா இந்த கேசை வேறு யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று நினைத்தார். உயர் அதிகாரியிடம் இதை பற்றி பேசினார். த்ன குடும்பத்தை சந்தேகத்தின் பேரில் இருக்கும்போது, இந்த கேசை தானே கையாள்வது சரி இல்லை என்றார். ஆனால் அவரோ சந்தியா மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார். பின் கிடைத்த உடல் விக்கியுடயதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று அனைவருக்கும் லேசாக தெரிய வந்தது. உடனே சரவணன் கடையை உடைத்து எறிந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…