ராஜா ராணி 2 தொடரில் இன்று, அந்த சாமியார் சிவகாமி அம்மா வீட்டுக்கு வந்தார். வந்தவருக்கு பாத பூஜை செய்து கவனித்தார்கள். அதே நேரம் ரவி நன்கொடையாக வாங்கி அந்த நாலரை லட்ச பணத்தை அவரிடம் கொடுத்தார். மேலும் தென்காசியில் இவர் தான் அதிக நன்கொடை வாங்கி இருப்பதாக பெருமையாக கூறினார். ஆனால் இங்கு நடக்கும் எதுவுமே சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக நடப்பதை எரிச்சலுடன் பார்த்தார். சரவணன் அதை கவனித்தார். மேலும் தனியாக அழைத்து என்ன பிரச்சனை என்று விசாரித்தார். சந்தியாவும் நடப்பதை பார்த்தால் அவர் சாமியார் போல் இல்லை என்றார். மேலும் மக்களை ஏமாற்றுகிறார் என்று கூறினார். ஆனால் அதை சரவணன் கூட நம்பவில்லை. ஆனால் சல்மா சொன்னதை வைத்து பார்த்தால் இவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று கூறினார். மேலும் இதை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என்று கூறினார். ஆனால் சரவணனுக்கு அதில் துளியும் nmbikkai இல்லை. சந்தியா எதோ தெரியாமல் பேசுகிறார் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…