Raja Rani 2 Today Episode | 12.07.2022 | Vijaytv
Raja Rani 2. 12.07.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜலபுல ஜிங் சாமியார் சிவகாமி அம்மா வீட்டில் இருந்து தான் ஒரு பெரிய கடவுள் போல் காட்டிகொண்டார். அதையும் சிவகாமி, அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் மற்றும் ஊர்க்கர்கள் என்று அனைவரும் நம்பினார்கள். ஆனால் சந்தியவுக்கு அதை எல்லாம் பார்த்து எரிச்சலும் கோவமும் வெடித்தது முகத்தில். சரவணனை தனியாக அழைத்து பேசினார். சரவணன் கூட அவரை நம்பவில்லை. ஆனாலும் விடாமல் அதை நிரூபிக்க சல்மாவுக்கு அழைத்து அந்த கோவிந்துக்கு வீடியோ கால் பேசவேண்டும் என்று கூறினார். அப்படியே சல்மாவும் அழைத்தார். உடனே அந்த சாமியார் தனக்கு தியானம் செய்யும் நேரம் வந்து விட்டது என்று தனி அறைக்கு சென்றார். உடனே அதை பார்த்து அனைவரும் வியந்தார்கள். ஆனால் சந்தியா சரவணனை அழைத்து சென்றார். அவர் பேசுவதை ஜன்னல் வழியாக சரவணன் சந்தியா இருவரும் பார்த்தார்கள். அந்த சாமியார் ஒரு போலி சாமியார் என்று சரவணனுக்கு தெரிய வந்தது. ஊரை ஏமாற்றி காசு பார்க்கிறார் என்று தெரியவந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…