Raja Rani 2 Today Episode | 12.08.2022 | Vijaytv
Raja Rani 2. 12.08.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா யாருமே எதிர்பார்க்காதது போல் பூஜை செய்து சந்தியாவின் ஹால் டிக்கெட்டை கொடுத்து அவரை ஆசிர்வாதம் செய்தார். மேலும் அவரது பெற்றோர்களின் ஆசைப்படி போலீஸ் ஆகட்டும். ஆனால் அதற்கு என் மகனையோ இந்த குடும்பத்துக்கோ எந்த வித பிரச்சனையும் வர கூடாது. மேலும் அவர் குடும்ப பொறுப்பில் என்றும் விலக கூடாது என்றும் கூறினார். இதை கேட்ட சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சந்தோசத்தில் இருந்தார்கள். வீட்டில் அனைவருமே சந்தோசத்தில் இருந்தார்கள். ஆனால் அர்ச்சனா மட்டுமே இதில் பொறாமை கொண்டார். சிவகாமி இப்படி செய்வதில் எதோ ஒரு உள்குத்து இருப்பதாக நினைத்தார். அதே நேரம் சரவணன் வாபார சங்க மாநாடு ஒன்று நடப்பதாகவும் அதற்கு சரவணன் போக வேண்டும் என்று கூறினார். அதற்கு ஏற்பாடுகளும் நடந்தது. சந்தியாவின் பரிட்சை நடக்கும் நேரம் சரவணன் அங்கு அவருடன் இருக்க முடியாத சூழ்நிலை. ஆனாலும் சிவகாமி தானே சாந்தியாவை பார்த்துக்கொள்வதாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…