Raja Rani 2 Today Episode | 13.07.2022 | Vijaytv
Raja Rani 2. 13.07.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அந்த சாமியார் ஒரு போலி சாமியார் என்று சரவணனுக்கு தெரியப்படுத்தினார். அதை அடுத்து வீட்டுக்கே தெரியாமல் சரவணன் உடன் சேர்ந்து அந்த சாமியாருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டினார்கள். மேலும் அதை போலீசில் புகார் கொடுக்கவும் செய்தார்கள். அதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவனங்களை ஒப்படைத்தார். ஆனால் அதே நேரம் சிவகாமி அம்மாவை இந்த கோவில் கட்ட முதல் கல் நாட்டும் ஆளாக நின்றார். பூஜை எல்லாம் முடிந்து சிவகாமி அம்மா கல்லை எடுத்து வைக்க போன நேரத்தில் அங்கு சந்தியா போலீஸ் உடன் வந்து சேர்ந்தார். மேலும் அந்த சாமியார் மீது புகார் வந்து உள்ளது, அரசுக்கு சொந்தமான இடத்தை அபகரித்து கோவில் கட்ட உள்ளதாக கூறி அதில் ஒரு பெரிய மால் கட்டபோவதகா புகார் என்று கூறினார். யார் புகார் கொடுத்தது என்று கேட்டதற்கு சந்தியாவின் குரல் வந்தது. அவரை பார்த்ததும் சிவகாமியின் கோவம் உச்சத்தை தொட்டது. கோவில் கட்ட முதல் கல் எடுத்து வைக்கும் நேரம் இப்படி அபாசகுணமாக செய்து தன் குடும்பத்துக்கு பெரிய பாவத்தை கொண்டு வந்து விட்டார் என்று கூறினார். மேலும் வீட்டுக்கு வந்து சந்தியா சரவணன் இருவர் மீதும் பாய்ந்தார். இந்த நிலையில் சந்தியாவின் போலீஸ் கனவை உடைக்கும் வகையில் சிவகாமி ஏறி வைத்த மூன்று விளக்குகளில் ஒன்றை அனைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.