Raja Rani 2 Today Episode | 13.09.2022 | Vijaytv

Raja Rani 2. 13.09.2022

Raja Rani 2. 13.09.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி வீட்டுக்கு பெண் கேட்டு சிவகாமி அம்மா குடும்பத்தோடு கிளம்பினார்கள். ஜெஸ்ஸி வீட்டு வாசலில் கோலம் போட்டு இருந்தார்கள். அதை பார்த்ததும் சிவகாமி அம்மாவுக்கு சந்தோசம். மேலும் இதை கண்டிப்பாக ஜெஸ்ஸி தான் போட்டு இருக்க வேண்டும் என்று சந்தியா கூறினார். ஆனால் அர்ச்சனா அதற்கு வாய்ப்பு இல்லை என்றும், இப்போது அவள் கண்டிப்பாக சேலை கூட கட்டி இருக்க மாட்டாள் என்று கூறினார். ஆனால் சந்தியா கண்டிப்பாக ஜெஸ்ஸி இதை எல்லாம் செய்வாள் என்று கூறினார். மேலும் வீட்டுக்குள் வந்ததும் திருமணம் செய்ய நல்ல நாள் பார்ப்பதை பற்றி பேசினார்கள். ஆனால் அர்ச்சனா உங்கள் மதப்படி திருமணமா இல்லை எங்கள் கலாச்சார படி நடக்குமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சிவகாமி அம்மாவும் எங்கள் கலாச்சாரப்படி தான் நடக்க வேண்டும் என்பது போல் பேசினார். ஆனால் சந்தியா மற்றும் சரவணன் இருவருமே இரண்டு மாதங்களுக்கும் இரண்டு முறை திருமணம் நடத்தினால் பிரச்சனை இல்லை என்றார்கள். அதற்கு அனைவரும் ஒத்துக்கொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author