Raja Rani 2 Today Episode | 13.12.2022 | Vijaytv
Raja Rani 2. 13.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா படகு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று சிவகாமி அம்மா காலையில் இருந்து விரதம் இருந்தார். மேலும் காற்று, புயல், மழை, வெயில் என எது வந்தாலும் அசையாமல் அந்த இடத்திலேயே அமர்ந்து இருந்தார். மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி இருந்தார். அதை பார்த்த சரவணன் மற்றும் ரவி அப்பா விரதம் எதுவும் வேண்டாம் என்று கெஞ்சினார்கள். ஆனால் சிவகாமி அம்மா அப்படி என்னால் வர முடியாது என்று கூறினார். அதே நேரம் சந்தியாவுக்கு படகு போட்டி ஆரம்பம் ஆனது. அதில் இருக்கும் பிரச்சனைகளை தெரிந்ததும் சந்தியா இதை கண்டிப்பாக முடித்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தார். சரவணன் சந்தியாவுக்கு அழைத்து இங்கு நடக்கும் விஷயத்தை கூறினார். அதை கேட்டதும் சந்தியா அழுது புலம்பினார். இந்த போட்டியில் தன் மாமியாருக்காக கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….