Raja Rani 2 Today Episode | 14.02.2023 | Vijaytv
Raja Rani 2. 14.02.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஹோட்டலில் யாருக்கும் தெரியாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவரது வேலையை பார்த்துவிட்டு திரும்பினார். அது தெரியாமல் சிவகாமி சந்தியா சாப்பிட வந்த இடத்தில் இவளை காணவில்லை என்று நினைத்தார். மேலும் இந்த வேலையே இப்படி தான் , எந்நேரமும் போலீஸாகவே இருக்க வேண்டும் என்று கடுப்பாக பேசினார். பின் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சேர்ந்து சமாளித்து வீட்டுக்கு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்தாலும் சிவகாமிக்கு சந்தியாவின் வாக்கி டாக்கியில் சத்தம் வருவது எரிச்சல் தருகிறது என்று மீண்டும் கத்தினார். சற்று நேரத்தில் சந்தியாவுக்கு அழைப்பு வந்தது. உடனே அவரும் கிளம்பினார். ஆனால் சிவகாமிக்கு தெரியாமல் சரவணன் அனுப்பி வைத்தார். இதற்கிடையில் தேர்தலுக்காக ஒதுக்கிய பணத்தை கவிதா தானே அபகரிக்க வேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்கு பரந்தாமன் உதவி செய்கிறேன் என்று கூறினார். ஆனால் அதை பற்றி தெரிந்த சந்தியா போகும் வண்டி அனைத்தையும் மறித்து பரிசோதித்து அனுப்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….