Raja Rani 2 Today Episode | 14.07.2022 | Vijaytv
Raja Rani 2. 14.07.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா செய்த காரியத்துக்கு வீட்டில் சிவகாமி தாண்டவம் ஆட்டம் போட்டார். மேலும் இந்த வீட்டுக்கு கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்தி பெரிய பாவத்தை கொண்டு வந்து விட்டாள் என்று கோபம் கொண்டார். மேலும் இந்த ஊரே சந்தியா செய்தது தவறு என்றும், ஊருக்கு ஒரு பெரிய சாபத்தை கொண்டு வந்து விட்டதாக பேசிக்கொண்டார்கள். இதனால் கோவத்தில் சந்தியாவும் கொடுத்த மூன்று வாய்ப்பில் ஒரு வாய்ப்பு முடிந்தது என்று கூறினார். மேலும் அவருக்காக ஏற்றப்பட்ட மூன்று விளக்கில் ஒன்றை அணைக்கவும் செய்தார். இதை பார்த்த அர்ச்சனாவுக்கு குளு குளுவென இருந்தது. ஆனால் ரவி மீண்டும் சிவகாமி இடம் பேசினார். என்னதான் அந்த சாமியார் மீது நம்பிக்கை இருந்தாலும் எனக்கு அதை விட ஒரு படி அதிகமாக சந்தியா மீது நம்பிக்கை இருக்கிறது என்றார். இதை கேட்டதும் மீண்டும் சிவகாமி ரவி இடம் தன் கோவத்தை காட்டினார். மேலும் இம்முறை சந்தியாவுக்கு வீட்டில் அனைவருமே எதோ தவறு செய்து விட்டார் என்ற நினைப்பு தான் இருந்தது. செந்தில் கூட இதை எதோ தெய்வ குத்தம் என்பது போல் பேசினார். சரவணன் இவளவோ பேசி புரிய வைத்து பார்த்தும் யாரும் கேட்கும் நிலையில் இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.