Raja Rani 2 Today Episode | 15.02.2022 | Vijaytv

Raja Rani 2.15.02.2022

Raja Rani 2.15.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் கடையில் கூட்டம் அலை மோதியதை பார்த்த ஆதி வீட்டில் வந்து கூறினான். இனிப்பு கடையில் 5 6 பேர் நிற்கிறார்கள் என்று கூறினார். அதை கேட்ட பார்வதி இதெல்லாம் கம்மிதான், காலையில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்து அண்ணனை பார்த்து பேசி, செல்ஃபி எடுத்து வேண்டும் என்ற இனிப்புகளை வாங்கி செல்கிறார்கள் என்று பெருமையாக கூறினார். இதெல்லாம் எதனால் என்று கேட்டார் ஆதி. உடனே சிவகாமி, இது அனைத்தும் சரவணன் போட்டியில் கலந்து வெற்றி பெற்றதால் அவனை பார்க்க பல இடங்களில் இருந்து ஆட்கள் வருவதாக பெருமிதமாக கூறினார். செந்திலும் இதை கேட்டு அவர் பங்குக்கு புகழ்ந்தார். இதை எல்லாம் பார்த்த அர்ச்சனா எரிச்சல் அடைந்தார். அவர் கடையில் மட்டும் வியாபாரம் ஓடுதே என்று வயிற்றெரிச்சலில் இருந்தார். சந்தியா தானே சப்பாத்தி மற்றும் குருமா செய்ததாக கூறினார். உடனே அர்ச்சனா தனியாக சமைக்கும் அளவுக்கு தேரி விட்டாயா என்று வினவினார். பின் அந்த சப்பாத்தி மற்றும் குருமாவை போட்டு அவர் மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதி இருந்த குறுமாவில் உப்பை அள்ளி கொட்டினார். ரவி மற்றும் சிவகாமி இருவரும் நம் வீட்டில் காணாமல் போன அந்த 5 லட்சம் பணம் பற்றி எந்த தகவலும் இல்லையே என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அதை கண்டிப்பாக கண்டு பிடித்தே ஆவேன் என்று சிவகாமி கூறினார். எப்படியும் எடுத்த பணத்தை செவ்வாய் செய்யும்போது மாட்டிகொள்வார்கள் என்று கூறினார். சரவணன் மற்றும் சந்தியா இருவரும் கடை வியாபாரம் பற்றி பேசிக்கொண்டார்கள். இது அனைத்துக்கும் சந்தியாவின் நம்பிக்கை மட்டும் தான் காரணம் என்று கூறினார் சரவணன். அவரை புகழ்ந்து தள்ளினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author