Raja Rani 2 Today Episode | 15.09.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா மருத்துவமனைக்கு செந்தில் உடன் பரிசோதனைக்கு போய் இருந்தார். அங்கு குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது என்று கூறினார். அதை கேட்டு மிகவும் சந்தோஷபட்டார்கள். பின் செந்தில் வெளியே சென்ற நேரம் பார்த்து அர்ச்சனா அந்த டாக்டர் இடம் தனக்கு ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா என்று கேட்டார். அந்த டாக்டர் கோவத்தில் திட்டினார். இதை எல்லாம் கேட்பதே தவறு தான் என்று கண்டித்தார். பின் வீட்டுக்கு திரும்பினார்கள். சந்தியா மற்றும் சரவணன் நேர் முக தேர்வுக்கு சென்னை கிளம்பினார்கள். சிவகாமிக்கு முழு மனதோடு அனுப்ப விருப்பம் இல்லை என்றாலும் வெறி வழி இல்லாமல் நல்ல வார்த்தை சொல்லி அனுப்பி வைத்தார். பின் ஆசிர்வாதம் வாங்கி விட்டு இருவரும் கிளம்பினார்கள். பேருந்தில் பயணம் ஆரம்பம் ஆனது. சந்தியாவால் நடப்பதை நம்பவே முடியவில்லை. தன் பல வருட கனவு நடக்க போவதால் சந்தியா சந்தோசமாக இருந்தார். போகும் வழியில் அவர்கள் வந்து பேருந்து திடீர் என்று ஓடவில்லை. எதோ பிரச்சனை அதை சரி செய்தால் தன போகலாம் என்று கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author