Raja Rani 2 Today Episode | 15.12.2021 | Vijaytv
rajarani2.15.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா மற்றும் குடும்பத்தில் அனைவரும் மருத்துவமனையில் இருந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர். வந்ததும் சிவகாமி,சந்தியாவை திட்டித்தீர்தார். இந்த போட்டியெல்லாம் எதுவும் வேண்டாம் எல்லாருக்கும் டிக்கெட் போடு என்றார். ஆனால் சந்தியா மீண்டும் அவரை இந்த போட்டியில் கலந்துகொண்டால் மட்டுமே அவருக்கு தன்னம்பிக்கை வரும் என கூறினார். சிவகாமி மீண்டும் கோபம் கொண்டார். என்ன நடந்தாலும் தான் சரவணனை இந்த போட்டியில் கலந்துகொள்ள விடமாட்டேன் என்றார்.பின் சரவணன் கண் முளித்ததும் வெளியில் நடந்து வரலாம் என்று சந்தியா அழைத்து சென்றார். அப்போது சரவணன், தான் தகுதி இல்லாதவன், எனக்கு திறமை எல்லாம் எதுவும் இல்லை என்று மனம் உடைந்து பேசினார். ஆனால் சந்தியா அதை மறுத்தார். ஆனாலுமm சரவணன் போட்டியில் கலந்துகொள்ள வேண்டாம், அதனால் வீட்டுக்கே கிளம்பலாம் என்றார். சந்தியா அதிர்ச்சி அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…