Raja Rani 2 Today Episode | 16.03.2022 | Vijaytv

Raja Rani 2. 16.03.2022

Raja Rani 2. 16.03.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தான் திருடி வந்த சரவணனின் A.T.M கார்டை எடுத்து கொண்டு வந்தார். பணம் எடுக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு பின் நம்பர் தெரியாததால் என்ன போடுவது என்று முளித்தார். பல முறை தவறாக போட்டார். ஆனால் கடைசியாக சந்தியாவின் பிறந்த தேதியை போட்டு பார்க்கலாம் என்று முயற்சித்தார். கடைசியில் அந்த முயற்சியில் வெற்றியும் அடைந்தார். பின் சரவணன் எவ்வளவு pnam வைத்து உள்ளார் என்று பார்த்தார். தன் புருஷனை விட அதிகமாக வைத்து உள்ளார் என்று வியந்தார். பின் தங்கி தேவையான 10000 மட்டும் எடுத்துவிட்டார். சரவணன் எதற்காக தன் அண்ணன் மணியை பார்த்து பேச வேண்டும் என்று சந்தியா குழம்பினார். ஒரு வேளை தன் போலீஸ் கனவை பற்றி பேசுவதற்காக இருக்குமோ என்று யோசித்தார். சரவணன் நாடகம் போட சக்கரை மற்றும் மயிலை தயார் செய்தார். அவர்களுக்கு கதை மற்றும் உடைகள் என அனைத்தையும் தயார் செய்தார். பின் இந்த குழுவில் ரவியும் சேர்ந்து கொண்டார். சக்கரை பாண்டிய மன்னனாகவும், மயிலு கண்ணகியாகவும், ரவி எமனகவும், சரவணன் கோ நடிக்க முடிவு செய்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author