Raja Rani 2 Today Episode | 18.05.2022 | Vijaytv
Raja Rani 2. 18.05.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை தேடி தேடி சோர்ந்து போனார்கள் ரவி மற்றும் சிவகாமி. சந்தியா மற்றும் சரவணன் இருவரும் வேறு ஒரு பக்கம் தேட என அனைவரும் பதட்டத்தில் இருந்தார்கள். செல்வம் பார்வதியை கடத்தி அவன் இடத்தில் கட்டி வைத்து இருந்தான். பார்வதிக்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தான். ஆனால் பார்வதி அதை சாப்பிட மறுத்தார். மேலும் தன் அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் சேர்ந்து எப்படியும் என்னை கண்டு பிடித்து விடுவார்கள் என்று நம்பிக்கையாக கூறினார். ஆனால் செல்வம் அதை கேட்டு நக்கலாக சிரித்தார். நான் என்ன அந்த விக்கி கருணாகரன் மாதிரி சின்ன ரௌடி என்று நினைத்தாயா? தான் ஒரு பயங்கரமான தீவிரவாத அமைப்பு என்று கூறினார். மேலும் பாஸ்கர் வீட்டில் இருந்து பார்வதியிடம் பேச வேண்டும் என்று மாத்தி மாத்தி அழைத்தார்கள். ஆனால் அவர்களையும் பதட்டபட வைக்க வேண்டாம் என்று நினைத்து உண்மையை மறைத்தார்கள். அந்த நேரம் சரவணன் வீட்டுக்கு ஒரு அழைப்பு வந்தது. என்ன அழைப்பு? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…