Raja Rani 2 Today Episode | 18.08.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவுக்கு இன்று பரிட்சை என்பதால் அதிகாலை எழுந்து வேலை எல்லாம் முடித்து விட்டு படித்துக்கொண்டு இருந்தார். அதை கவனித்த சிவகாமி வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் சந்தியாவை தொந்தரவு செய்ய கூடாது என்று கூறினார். மேலும் சரவணன் இல்லாததால் சந்தியாவை பரிட்சைக்கு செந்தில் தான் அழைத்து செல்ல வேண்டும் என்றார். அதை கேட்டதில் இருந்து அர்ச்சனா கோவத்தில் இருந்தார். பின் சந்தியாவும் குளித்து சாமி கும்பிட்டு பரிட்சைக்கு தயார் ஆனார். பின் சந்தியாவுக்கு சிவகாமியே சாப்பாடை ஊட்டிவிட்டார், வாழ்த்தினார். பின் சற்று நேரத்தில் சரவணன் வந்து சேர்ந்தார். பின் சந்தியாவை அழைத்துக்கொண்டு கிளம்பினார் சரவணன். போகும் வழி எல்லாம் பாதை அடைத்து இருந்தது. பின் அந்த தடைகளையும் தாண்டி சரவணன் பரிட்சை நடக்கும் இடத்துக்கு அழைத்து சென்றார். இதனால் தாமதம் ஆனாலும் சரியான நேரத்துக்கு வந்து விட்டார்கள். பின் பரிட்சைக்கு முன் சோதனை நடத்த பட்டது. அங்கு இருப்பவர் வரும் பெண்களை தவறாக தொட்டு தொட்டு பரிசோதனை செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author