Raja Rani 2 Today Episode | 18.11.2022 | Vijaytv
Raja Rani 2. 18.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, தன் மகன்கள் இருவரும் பதவிக்காக தெருவில் சண்டை போட்டதை நினைத்து வருந்தினார் சிவாகாமி. அவரை முடிந்த வரை சமாதானம் செய்தார் ரவி. ஆனால் சிவகாமி கேட்பதாக இல்லை. மேலும் அவர் காது படவே போரவர் வரவர் என்று அனைவரும் அவர்களை மட்டமாக பேசினார்கள். பதவிக்காக தெருவில் சண்டை போடும் அண்ணன் தம்பியை பெற்றவர்கள் என்று பேசிக்கொண்டார்கள். இதை எல்லாம் தாங்கிக்கொள்ளாமல் சிவகாமி அழுது புலம்பினார். இருந்தாலும் இது எல்லாம் சரி ஆகி விடும் என்று நம்பிக்கையாக இருந்தார் ரவி அப்பா. அர்ச்சனா பக்கத்து வீட்டு பெண்ணோடு பேசிக்கொண்டு இருந்தார். அவரது குழந்தையை அந்த பெண்ணுக்கு மாற்றி வைததால் அடிக்கடி அவரை பார்த்து பேசவும் செய்வார் அர்ச்சனா. அந்த நேரம் குழந்தையை ஒரு வண்டி இடிக்க வந்தது. அதை பார்த்த அர்ச்சனா தன் குழந்தைக்கு எதாவது ஆகி விடுமோ என்று நடுங்கினார். அதை கவனித்த ஜெஸ்ஸி குழந்தையை பெற்ற அம்மாவே அமைதியாக இருக்கும்போது உனக்கு என்ன என்றார்கள். அதையும் எதேதேதோ சொல்லி சமாளித்தார். சந்தியா பயிற்சியில் இன்று ஷாட்புட் போட்டி நடந்தது. அதில் சந்தியா சரியாக விளையாட மாட்டாள் என்று எதிர் பார்த்த அப்துல் அதிர்ச்சியில் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.