ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் போலீஸ் சொன்ன மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் சரவணன் மிகவும் பதட்டமாக இருந்தார். அவரால் வண்டி ஓட்டவோ, யாரை பார்த்து பேசவோ அவரால் செய்ய முடியவில்லை. அங்கு சந்தியா அழியதுப்பேசிய போது அந்த போலீஸ் மெரு ஒரு இடத்துக்கு வர வைத்தார். அது ஒரு பினவரை என்று சொல்லாமல் சரவணனை அழைத்து வந்தார். சரவணன் அந்த இடத்தை பார்த்தே பதட்டம் அடைந்தார். பார்வதிக்கு என்ன ஆனதோ எதோ ஆனதோ என்று புலம்பினார். இங்கு பார்வதி இருக்க வாய்ப்பு இல்லை வேறு இடம் சென்று தேடலாம் என்றார். அவரால் பார்வதி பிணவறையில் இருப்பர் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதனால் சந்தியா மட்டும் தனியாக சென்று பார்த்து வந்தார். அங்கு இருப்பது பார்வதி இல்லை என்று தெரிய வந்தது. இதனால் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சற்று நிம்மதி அடைந்தார்கள். மேலும் வீட்டில் பாஸ்கர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பதறினார். சிவகாமி மற்றும் ரவி சாமி முன் அமர்ந்து வேண்டினார்கள். அப்போது மருத்துவமனையில் இருந்தது பார்வதி இல்லை என்று தெரிய வந்ததும் வீட்டில் அனைவரும் பெரு மூச்சு விட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்வதி மற்றும் பாஸ்கர் இருவரும் விருந்துக்கு அழைக்க வந்தார்கள். ஆனால் அவர்களை ஏதேதோ சொல்லி சமலித்தார்கள். ஆனால் சந்தியாவுக்கு மட்டும் பார்வதி கடைசியாக கடையில் தான் இருந்து இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…