Raja Rani 2 Today Episode | 20.04.2022 | Vijaytv

Raja Rani 2. 20.4.2022

Raja Rani 2. 20.4.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா 108 விளக்குகளை ஏற்ற கஷ்டப்பட்டார். பின் சரவணன் அவருக்கு உதவி செய்ய வந்தார். சிவகாமி இல்லாத நேரம் பார்த்து அங்கு இருந்த விளக்கு ஒவ்வொன்றாக அவரும் சேர்ந்து ஏற்றினார். சிவகாமி அம்மா வருவதற்குள் அத்தனை விளக்குகளையும் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சேர்ந்து ஏற்றி முடித்தார்கள். சிவகாமி வருவதை பார்த்து சரவணன் ஒளிந்து கொண்டார். விளக்கு அத்தனையும் பிரகாசமாக எரிவதை பார்த்து சந்தோசத்தில் பொங்கினார் சிவகாமி. உடனே பக்கத்து வீட்டு பெண்களை கூப்பிட்டு பெருமையாக பேசினார். சந்தியாவை தவறாக பேசிய பெண்கள் முன் பெருமையாக பேசினார். பின் சரவணன் நகு வந்து சாமி கும்பிட வந்ததாக கூறினார். பின் கடையில் வேலை இருப்பதாக சொல்லி சந்தியாவை அழைத்து செல்கிறேன் என்றார். சிவகாமியும் அதை நம்பி தனியாக வீட்டுக்கு கிளம்பினார். அர்ச்சனா எப்படி பார்வதி பாஸ்கர் திருமணத்தை நிறுத்துவது என்று தெரியாமல் போலம்பிக்கொண்டே நடந்தார். அங்கு விக்கி தான் அந்த வேலையை கச்சிதமாக செய்வேன் என்று நம்பிக்கை கூறி சென்றார். பத்திரிக்கை வந்து விட்டது என்று பாஸ்கர் பார்வதி வீட்டுக்கு எடுத்து வந்தார். பார்வதி இடம் தனியாக பேச வேண்டும் என்று ஆசைப்பட்டார் பாஸ்கர். அதை கவனித்த ஆதி வீட்டில் அனைவரையும் வேறு வேலை குடுத்து தனியாக பேச வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author