Raja Rani 2 Today Episode | 20.10.2021 | Vijaytv
Rajarani2.20.10.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா கடையில் கிடைத்த பாஸ்போர்ட்டை எப்படி உரியவரிடம் ஒப்படைப்பது என பலத்த யோசனையில் இருந்தார். சரவணன் என்ன யோசனை என கேட்க, இந்த பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் நான் சென்று சொல்ல வேண்டாம், ஒரு போலீஸ் தொலைபேசி எண் இருக்கிறது அவருக்கு அனுப்பிவிடலம் என்று கூறினார். ஆனால் சரவணன் அதெல்லாம் ஒன்றும் அனுப்ப வேண்டாம். அம்மாவிடம் கேட்டு செய்யலாம் என்று கூறினார். சரி என்று கூறிய சந்தியா கை தவரி அந்த குறுஞ்செய்தி அனுப்பிவிட்டார். அது சந்தியாவுக்கே
தெரியாது.
பின் அடுத்த நாள் காலையில் சிவகாமி கோவிலுக்கு கிளம்பினார். கிளம்பும்போது சந்தியாவை வடகம் செய்து வைக்க சொன்னார். சந்தியாவோ எனக்கு செய்ய தெரியாதே என்று கூறினார். ஆனால் அதை சிவகாமி பொருட்படுத்தாமல் நீ இதை செய்து தான் ஆக வேண்டும் என்று கூறினார். உதவ வந்த ரவி மற்றும் பார்வதியை சேர்த்து கோவிலுக்கு அழைத்து சென்றார். சந்தியா ஏதாவது வீடியோ பார்த்து செய்ய முடிவு செய்தார். ஆனால் சரவணன் அதற்குள் வந்து தான் உதவுவதாக கூறி உதவினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…