Raja Rani 2 Today Episode | 21.04.2022 | Vijaytv

Raja Rani 2. 21.04.2022

Raja Rani 2. 21.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிந்தது. இரவில் பால் வாங்கி தினமும் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். பின் பூ விக்கும் அம்மாவும் இரவில் வந்து கொடுத்தார். வழக்கத்தை விட அதிகமாக 4 முழம் மல்லிகை பூ வாங்கினார். இதை எல்லாம் பார்த்து ரவியும் அர்ச்சனாவும் எதுவும் புரியாமல் நின்றார்கள். பின் சந்தியா வீட்டுக்கு வந்ததும் அவரை பார்த்து சோர்ந்து போய் வந்து இருக்கிறாய் என்று கூறினார். பின் அவரை குளித்து விட்டு அவருக்கு புடவை எடுத்து வைத்து அதை கட்டிகொள்ள சொன்னார். பின் சிவகாமியே சந்தியாவுக்கு பூவை தலையில் வைத்து விட்டார். அர்ச்சனா அதை எல்லாம் பார்த்து எரிச்சல் அடைந்தார். சரவணன் வீடு திரும்பியதும் சந்தியா இன்று வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார். சாப்பிட்டு முடித்ததும் சரவணன் சந்தியா அறைக்கு சென்று பார்த்தால் அங்கு அவர்களுக்கு முதல் இரவுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. அதை பார்த்து சரவணன் சந்தியா இருவரும் என்ன செய்தார்கள்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author