ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அப்துல் பேசிக்கொண்டு இருக்கும்போதே மயங்கி விழுந்தார். இதனால் அப்துல் மிகவும் கோவம் கொண்டார். இந்த மாதிரி ஆட்கள் எதற்காக இந்த பயிற்சிக்கு வர வேண்டும் என்று குத்தளாக பேசினார். பின் சந்தியா தன் நிலையை சரவணன் இடம் கூறினார். தன்னால் எந்த பயிற்சியும் சரி வர செய்ய முடியவில்லை எனவும், உடம்பு மிகவும் வலு இழந்து போனது என்றும் கூறினார். சரவணன் அதற்கு என்ன செய்வது என்று புரியாமல் ஆறுதல் சொன்னார். ஆனால் சற்று நேரத்தில் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்து ஒரு பெண் வந்து இருந்தார். அவர்கள் பேசுவதை சரவணன் கேட்டார். அந்த பெண்ணுக்கும் மயக்கம், வாந்தி, உடம்பு வலு இல்லாமல் இருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். இதற்கு சிவகாமி இது கண்டிப்பாக கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்றார். இதனால் சரவணன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அடுத்த பயிற்சியில் என்ன தான் சந்தியா முயற்சி செய்தாலும் அவரால் எதையுமே சரிவர செய்ய முடியவில்லை. மேல் அதிகாரி கௌரி முதல் அனைவருமே சந்தியாவை திட்ட ஆர்மபிதார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…