Raja Rani 2 Today Episode | 22.04.2022 | Vijaytv
Raja Rani 2. 22.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் அவர்களுக்கு கொடுத்த பாலை மாத்தி மாத்தி குடித்து முடித்தார்கள். பின் சரவணன் சந்தியாவை படிக்க சொன்னார். சந்தியாவும் படிக்க ஆரம்பித்தார். காலையில் சந்தியா எப்போ அறையை விட்டு வெளியே வருவார் என்று காத்திருந்தார் சிவகாமி. சந்தியா வந்ததும் பால் பழம் எல்லாம் சாப்பிட்டு வந்ததால் கண்டிப்பாக முதல் இரவு நல்லபடியாக முடிந்து இருக்கும் என்று அவரே நினைத்துக்கொண்டார். ஆனால் சந்தியாவை தாங்குவதை பார்க்கும் அர்ச்சனா எரிச்சல் அடைந்தார். சந்தியாவுக்கு குழந்தையே பிறக்க விடாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்கும் எதாவது மருந்து இருக்கும் அதை அந்த சாமியாரிடம் வாங்கி வர வேண்டும் என்று நினைத்தார். ஆனால் செந்தில் அர்ச்சனாவின் யோசனையை பார்த்து பயந்தார். மேலும் குடும்பத்துக்கு எதாவது பிரச்சனையை எடுத்து வருவாளோ என்று பயந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…