ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் கடையில் இருந்தது கலப்படம் செய்த எண்ணெய் தான். ஆனால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். பின் சிவகாமி அம்மாவும் தன் மகன் எந்த வித தவறான செயலும் செய்ய மாட்டான் என்று கூறினார். ஆனால் அந்த போலீஸ் அதிகாரி அதை காதில் வாங்காமல் சரவணனை கைது செய்ய மட்டுமே குறியாக இருந்தார். பின் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து சரவணன் எந்த தவறும் செய்ய மாட்டார் என்று துணையாக நின்றார்கள். பின் சரவணன் செய்த இனிப்பை பரிசோதித்து பார்த்து பின் அவரை கைது செய்யுமாறு கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….