Raja Rani 2 Today Episode | 23.03.2022 | Vijaytv
Raja Rani 2. 23.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா ஏதோ தில்லு முள்ளு செய்வது போல் செந்தில் நினைத்தார். தை கேட்கவும் செய்தார். ஆனால் அவர் கர்பமாக இருப்பதால் பெரிதாக எதும் விவரங்கள் கேட்டுகொள்ளவில்லை. அர்ச்சனா மார்கெட்டில் நடந்த விஷயத்தை கூறி சிவகாமி இடம் சந்தியாவை திட்டு வாங்க வைக்க முடியவில்லை என்று வருத்தமாக இருந்தார். பின் இதை வேறு விதமாக பிரச்சனை செய்ய வேண்டும் என்று விக்கிக்கு அழைத்து பேசினார். சந்தியாவின் திறமையை பற்றியும் தைரியத்தை பற்றியும் இந்த ஊரே பாராட்டுகிறார்கள் என்று செல்வம் சரவணன் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் மார்கெட்டில் கடை போட்டிருக்கும் அனைவருமே தலைவருக்கு பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அந்த கடையே இருக்காது என்று ஒரு கூட்டம் வந்தது. அதை பார்த்து சரவணன் செல்வம் இருவருமே அதிர்ச்சியில் நின்றார்கள். அந்த தலைவரும் சரவணன் கடியாக்குள் வந்து தனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு வியாபாரம் செய்ய வேண்டும் என்று எச்சரித்தார். அந்த நேரம் சந்தியா அங்கு வந்து இதெல்லாம் தவறு என்று பாடம் எடுத்தார். ஆனாலும் அதை கேட்காமல் அடுத்த அடுத்த கடைகளில் பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அதில் விக்கி ஒரு ரௌடி போல் ஒரு கடைக்காரரை அடுத்து பணம் பரித்தான். சந்தியா இங்கு யாராவது ஒருவருக்கு பிரச்சனை என்றாலும் ஒன்று திரண்டு ஒரு துணையாக நின்றாள் எந்த பிரச்சனையும் சரி செய்யலாம் என்று திட்டம் போட்டு கொடுத்தார். அதன் படி சரவணன் செய்தார். அதே போல் வந்த கும்பல் உடனே ஓடி விட்டது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.