Raja Rani 2 Today Episode | 24.02.2022 | Vijaytv

Raja Rani 2.24.02.2022

Raja Rani 2.24.02.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் அண்ணன் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் அவரை வரவெர்தார்கள். அவரும் தயக்கத்தோடு முதலில் பேசினார். சந்தியா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தார். சிவகாமி அதற்கு இப்போது சந்தியா தான் இந்த வீட்டின் ரொம்ப நல்ல மருமகளாக இருக்கிறாள் என்று கூறினார். அதை கேட்டதும் சரவணன் சந்தியா இருவருக்குமே சந்தோசம். ஆனால் அர்ச்சனா மட்டும் கோவத்தில் கொந்தளித்தார். பின் குழந்தைக்கு தொட்டில் கட்டி பெயர் சூட்டும் விழா நடத்தப்போவதாக கூறினார். அதற்கு குடும்பத்தோடு அனைவரும் வர வேண்டும் என்று அழைத்தார். சிவகாமியும் கண்டிப்பாக வருவதாக கூறினார். பின் உடனே மணி கிளம்பிவிட்டார். போகும் போது சரவணன் இடம், சந்தியாவிடம் அவள் கனவு ஆசை எதாவது இருந்தால் நிறைவேற்றுமாறு கூறினார். அர்ச்சனாவுக்கு சந்தியா அண்ணன் குழந்தைக்கு சீர் செய்வது பிடிக்கவில்லை. அவள் வீட்டுக்கு எதற்கு செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் பேச்சை செந்தில் கேட்பதாக இல்லை. அதனால் இன்னும் எரிச்சல் அடைந்தார். அந்த நேரம் பார்த்து விக்கி அர்ச்சனாவுக்கு அழைத்தார். தானும் பார்வதியும் இருப்பது போல் அனுப்பிய புகைப்படங்கள் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அர்ச்சனா அதை எல்லாம் எப்பவோ அழித்துவிட்டதாக கூறினார். அது இருந்தால் இந்த திருமணத்தை நிறுத்த எளிமையாக இருக்கும் என்று கூறினார். பின் வேறு எதாவது வழி கண்டு பிடிக்க வேண்டும் என்று வைத்தார். அடுத்த நாள் சந்தியாவின் அண்ணன் குழந்தை பெயர் சூட்டு விழாவுக்கு குடும்பத்துடன் அனைவரும் வந்தார்கள். அர்ச்சனாவுக்கு விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழி இன்றி கூடவே வந்தார். கோவிலில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும் அர்ச்சனாவுக்கு வயிரு எரிந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author